நாட்டில் ஏற்பட்ட உச்ச கட்ட நெருக்கடி மற்றும் ஆர்பாட்டத் தீயை ரணில் புகுந்து அணைத்தார்! நெருக்கடி ஆர்பாட்டம் தணிந்தது!
ரணில் வந்து ஒன்றுமே செய்யவில்லை.பெசில் செய்த அதேவேலையை செய்தார்!அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லை!அதனால் என்ன மீண்டும் பண அச்சடிப்பு! பணவீக்கம்
அமெரிக்கா ரணிலை கொண்டு வந்ததன் பிரகாரம் அமெரிக்கா உட்பட அதன் நேச நாடுகள் டொலர்களை அள்ளிக் கொட்டும் என்று ஒரு புரளியை அரச தரப்பு எடுத்து விட்டது !அதேபோல் ரணில் வாலாக்கள் கனவு கண்டார்கள்!இங்கு ஒரு இளவும் வரவில்லை .ஆனால் அமெரிக்கா ஒரு பிச்சை விரைவில் தர்மம் போடும்!
ரணில் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் எதிர் வரும் மாதங்கள் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் வரும் என்றும் அரசிடம் பணமில்லை டொலரும் இல்லை என்றும் வெளிப்படையாக பகிரங்கமாக சொல்லிவிட்டார்! நல்ல பிள்ளை ...
ரணில் பிரதமராக பதவி ஏற்றதும் கடந்த பொது தேர்தலில் தோல்வி கண்ட ரணிலின் சகபாடிகளை அரசின் தோல்விகளை கண்டறியும் குழுக்களாக நியமித்துள்ளார்.மற்றும் ஜனாபதியின் அதிகாரங்களை பறிக்கும் 21 வது மசோதாவை கொண்டு வரவும் .அரசின் இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் MP க்களை அதிக விலை கொடுத்து வாங்கவும் ஆள் பிடிக்கவும் ரணில் தரப்பு ஈடுபட்டுள்ளது ..
ஆக மக்களின் பஞ்ச பிரச்சனைக்கு எந்த தீர்வுமே இல்லை !.............
அப்படியானால் எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும் !....
1).சட்டம் ஒழுங்கு சீர்குலையும்!
2). மக்கள் மீண்டும் 2 ம் கட்டமாக வீதிக்கு இறங்கி கோட்டா ,ரணிலுக்கு எதிராக போராடும் நிலை !
3).மக்கள் பல இடங்களை முற்றுகை இடும் நிலை!
4).டாலர் கிடைக்காது போனால் எரிபொருட்கள் கிடைக்காது!..
5). மீண்டும் மீண்டும் வரிசையில் மக்கள் !...
6).பணவீக்கம் உச்சம் தொடும் !...
7)தற்போது கோட்டா அரசை முட்டுக் கொடுத்தவர்கள் ஓடி ஒழிக்கும் நிலை...
இனவாதத்தை மூலதனமாக்கி குண்டு வெடித்து ஆட்சி செய்யும் அரசும் ,இனவாதத்தை ஆதரித்து வாக்களித்த சிங்கள மக்களும் , இந்த அரசை எப்படியும் வெற்றி பெற வைக்கணும் என்று பொது தேர்தல் தினமான அன்றிரவு 10 மணிக்கு தேர்தல் காரியாலத்தில் தகவல் பிரிவில் 6 பேருக்கு இடமாற்றம் செய்த மஹிந்த தேசப் பிரியாவும் அனுபவிக்க வேண்டிய இந்த நெருக்கடி நிலையை நாம் எதற்காக அனுபவிக்க வேண்டும் ....
அதிலும் குறிப்பாக வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அனுவிப்பது கொடுமையிலும் கொடுமை ....
சரி பொது தேர்தல் தினமான அன்றிரவு 10 மணிக்கு தேர்தல் காரியாலத்தில் தகவல் பிரிவில் 6 பேருக்கு ஏன் மஹிந்த தேசப் பிரிய இடமாற்றம் கொடுத்தார்!வெளிவராத பரம ரகசியம்??
ஆனால் இதற்கான சாட்சி படத்தில் முதலாவது இருக்கும் நபர் ரணிலின் நண்பர் .தமிழர் ஹூல் (S. Ratnajeevan H. Hoole.) தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் ..
பார்ப்போம் .............
M,M,Nilamdeen
No comments:
Post a Comment