ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாக தொழிநூட்ப நேர்த்தியுடன் வெளிப்படுத்துவதைக் குறும்படம் எனலாம்.
குறும்படம் சில நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு மேலாகவும் அமையலாம்.
இயந்திர மயமான வாழ்வின் உழைத்துக் களைக்கும் உள்ளங்கள் ஓய்வுக்குக் கூட நேரம் ஒதுக்காத இக் காலகட்டத்தில் இலாப நோக்கோடு பாரிய முதலீட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் கொடுக்காத மன அதிர்வை இலாப நோக்கற்று குறைந்த செலவில் குறுகிய நேர இடைவெளியில் நம்மோடு ஸ்பரிசித்துச் செல்லும் இந்தக் குறும்படங்கள் கொடுத்து விடுவதுதான் இதன் சிறப்பு.
அந்த வகையில் குறும்பட எல்லைக்குள் நின்று தனது பங்களிப்பையும் சமூகத்துக்குச் செய்ய மறக்கவில்லை இந்த 'விமோசனம்"
'விமோசனதத்தை" கதை, காட்சியமைப்பு, கலைஞர்கள், தொழில்நுட்பம் எனும் நான்கு வகையான கண்ணோட்டத்தில் நோக்க விளைகின்றேன்.
முதலாவதாக கதையையும் காட்சியமைப்பையும் எடுத்துக்கொண்டால்......