பொருளாதார வளர்ச்சிக்கு தென்னிந்தியா ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“தென்னிந்தியாவையும் அதன் வளர்ச்சியையும் பார்க்கும்போது, தமிழகப் பொருளாதாரம் 2030ல் 1 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக உள்ளன.” என கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கைப் பொருளாதாரத்தில், குறிப்பாக எரிசக்தித் துறையில் இந்திய முதலீடுகள் முன்மொழியப்படுவதற்கு தேசியவாத அமைப்புகளின் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ஹர்சவின் கருத்து வெளியாகியுள்ளது.
தேர்தலைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. கடினமான காரியங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல கடினமான விடயங்களை செய்துள்ளார். அதை ஏற்க வேண்டும் என்று ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்; சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதை அனுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஹர்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment