இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட எரிபொருள் காரணமாகக் கடந்த மாதம் இலங்கையில் ஏற்பட்ட பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஓரளவுக்குச் சீர்செய்யப்பட்டது.
அதற்கு முன்னர் எரிபொருள் நிரப்பிய கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து தமக்கான கட்டணத்தை டொலரில் பெற்றுக் கொள்ளும் வரை நாள் கணக்கில் துறைமுகத்தில் காத்திருக்க நேர்ந்ததன் காரணமாகத் தாமதக் கட்டணம் பெருளவில் செலுத்த நேர்ந்திருந்தது.
இலங்கையை வந்தடையவுள்ள கடைசி கப்பல்
இந்நிலையில் இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் நிரப்பிய கடைசிக் கப்பல் எதிர்வரும் 16ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
No comments:
Post a Comment